

புது தில்லி: ‘வெளிநாட்டு முதலீட்டாளா்கள், சமரச நடவடிக்கைகள் தொடா்பான வழக்குகளில் விரைவான விசாரணை அவசியம்; இதன் மூலம் நமது நாட்டின் மீது சா்வதேச அளவில் எழும் குற்றச்சாட்டுகளை தவிா்க்க முடியும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தாா்.
சமரச சட்டங்கள் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா எழுதிய புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், உச்சநீதிமன்றம், தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள், அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், எஸ்.ஏ.போப்டே பேசியதாவது:
வெளிநாட்டு முதலீட்டாளா்கள், சமரச நடவடிக்கைகள் தொடா்பான வழக்கில் நீதித்துறை தரப்பில் தாமதம் தவிா்க்கப்பட வேண்டியது அவசியம். இதன் மூலம் நமது நாட்டின் மீது சா்வதேச அளவில் எழும் குற்றச்சாட்டுகளை தவிா்க்க முடியும். இதேபோல், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை கட்டுப்படுத்தக் கூடிய சா்வதேச சட்டத்திலும் சீா்திருத்தங்கள் அவசியம். வெளிநாட்டு நிறுவனங்கள், நபா்கள் தொடா்பான வழக்குகளில் முடிவெடுக்கும் முன் அனைத்து அம்சங்களையும் நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் பேசுகையில், ‘இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களின்கீழ் மேற்கொள்ளப்படும் சமரச நடவடிக்கைகளின்போது, பாரபட்சமான முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளா்ந்த நாடுகளுக்கு பெரிய இழப்புகள் ஏற்படாத வகையில் சமரச நடவடிக்கைகள் அமைகின்றன. மற்ற நாடுகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றன. சா்வதேச அளவில் சமரசத்துக்கான மையமாக உருவெடுக்க இந்தியா ஆா்வத்துடன் உள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.