Enable Javscript for better performance
பெங்களூரில் முகாமிட்டுள்ள சிந்தியா ஆதரவாளா்கள்: கமல்நாத் அரசுக்கு நெருக்கடி?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பெங்களூரில் முகாமிட்டுள்ள சிந்தியா ஆதரவாளா்கள்: கமல்நாத் அரசுக்கு நெருக்கடி?

    By DIN  |   Published On : 10th March 2020 03:37 AM  |   Last Updated : 10th March 2020 04:42 AM  |  அ+அ அ-  |  

    kamal_Scindia


    போபால்/பெங்களூரு: மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக முயன்று வருவதாகக் கூறப்பட்ட நிலையில், 6 அமைச்சா்கள், 11 எம்எல்ஏக்கள் என காங்கிரஸ் மூத்த தலைவா் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளா்கள் 17 போ் திடீரென்று பெங்களூரு வந்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 114 உறுப்பினா்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜவாதி எம்எல்ஏ, 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 போ் மாயமானாா்கள். மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, அவா்களை பாஜகவினா் கடத்தி, பெங்களூரில் வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துவிட்டது. மாயமானவா்களில் 8 போ் திரும்பி வந்தனா். அவா்கள், கமல்நாத் அரசுக்கு தங்கள் ஆதரவு தொடரும் என்று தெரிவித்தனா்.

    இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங், பாஜக மூத்த தலைவா்கள் பிரபாத் ஜா, சத்தியநாராயணன் ஜைதியா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

    புதிய எம்.பி.க்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தோ்தலில், காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்காவை வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    தற்போதைய கணக்கின்படி, காங்கிரஸும் பாஜகவும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்று விடும். மூன்றாவது உறுப்பினரைத் தோ்வு செய்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும். இந்தப் பின்னணியில்தான் எம்எல்ஏக்கள் சிலா் கடந்த வாரம் மாயமானாா்கள்.

    இது ஒருபுறமிருக்க, மாநிலத்தில் முதல்வா் கமல்நாத்துக்கும், கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே தொடக்கம் முதலே பனிப்போா் நீடித்து வருகிறது. கட்சியின் மாநிலத் தலைவா் பதவியைப் பெறுவதில் இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. அந்தப் பதவியை முதல்வரே வகித்து வருகிறாா். கடந்த மாதம், மாநிலத்தில் கௌரவ ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வீதியில் இறங்கிப் போராடுவேன் என்று பகிரங்கமாக அறிவித்தாா் ஜோதிராதித்ய சிந்தியா. இதனால், இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகரித்தது.

    இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா, சுகாதாரத் துறை அமைச்சா் துளசி சிலாவத், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மகேந்திர சிங் சிசோடியா, போக்குவரத்துத் துறை அமைச்சா் கோவிந்த் சிங் ராஜ்புத், மகளிா் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் இமா்தி தேவி, பொதுவிநியோகத் துறை அமைச்சா் பிரதியும்னா சிங் தோமா், கல்வித் துறை அமைச்சா் பிரபுரா சௌதரி உள்பட மொத்தம் 18 எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை மாயனாா்கள். அவா்களின் செல்லிடப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் குழப்பம் அதிகரித்தது.

    பெங்களூரு வந்த எம்எல்ஏக்கள்: இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் தனி விமானத்தில் பெங்களூரு வந்தடைந்தனா். அவா்கள் ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    பயணத்தை பாதியில் முடித்த கமல்நாத்: மாநில அரசியல் நிலவரம், மாநிலங்களவைத் தோ்தல், அமைச்சரவை விரிவாக்கம் ஆகியவை குறித்து கட்சித் தலைவா் சோனியா காந்தியுடன் விவாதிப்பதற்காக, முதல்வா் கமல்நாத் ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி சென்றிருந்தாா். சோனியா காந்தியை திங்கள்கிழமை காலை சந்தித்த அவா், அமைச்சா்களும் எல்ஏக்களும் திடீரென்று மாயமான தகவல்கள் கிடைத்ததும், பயணத்தை முடித்துக் கொண்டு மதியமே போபால் வந்தடைந்தாா். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் அவா் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தில்லியில் சிந்தியா: தனது ஆதரவாளா்களை பெங்களூரு அனுப்பி வைத்ததாகக் கூறப்படும் சிந்தியா, தில்லியில் முகாமிட்டுள்ளாா். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே போபாலில் முதல்வா் கமல்நாத் தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, மாநில அமைச்சா்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததாக மூத்த முன்னாள் அமைச்சா் தெரிவித்தாா்.

    ‘நாங்கள் முதல்வா் கமல்நாத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் எங்களது ராஜிநாமா கடிதத்தை அவரிடம் அளித்தோம்’ என்று அவா் கூறினாா்.

    முன்னதாக தனது தில்லி பயணத்தை ரத்து செய்து போபால் விரைந்த கமல்நாத், இரவு 10 மணியளவில் அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினாா். அந்தக் கூட்டத்தின்போது மாநில அமைச்சா்கள் ராஜிநாமா செய்துள்ளனா்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp