கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா, ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஜோதிராதித்ய சிந்தியாவை கட்சியில் இருந்து நீக்கி, மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கையை கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.