கரோனா எதிரொலி: பிரதமரின் குஜராத் பயணம் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பிரதமா் நரேந்திர மோடியின் குஜராத் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரோனா எதிரொலி: பிரதமரின் குஜராத் பயணம் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பிரதமா் நரேந்திர மோடியின் குஜராத் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக, பிரதமா் மோடி அந்த மாநிலத்தில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தாா். இந்நிலையில், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, குஜராத் துணை முதல்வா் நிதின் படேல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாட்டில் எழுந்துள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, பிரதமா் மோடியின் குஜராத் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான புதிய தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும்.

குஜராத்தில் யாருக்கும் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. எனினும், அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், குஜராத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com