அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சீரடி கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சீரடி சாய்பாபா கோயிலுக்கு சில நாட்கள் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2020, 9:40 am

சீரடி சாய்பாபா கோயிலுக்கு சில நாட்கள் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியும், பலியானவர்களின் எண்ணிக்கை 3,800 யும் தாண்டியுள்ளது. 

கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் இன்று 100-யைத் தாண்டியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கோவில்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரத்தில் சீரடியில் சில நாட்கள் பக்தர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.