இத்தாலியில் கரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் 55 தமிழக மாணவர்கள் உள்பட 211 மாணவர்கள் என மொத்தம் 218 பேர் சிக்கித் தவித்தனர்.
இந்த நிலையில், இத்தாலியில் சிக்கித் தவித்த 218 பேரும் மிலன் நகர விமான நிலையத்தில் இருந்து 'ஏர்-இந்தியா' சிறப்பு விமானம் மூலம் சனிக்கிழமை இந்தியா அழைத்து வரப்பட்டனர். 218 பேருடன் வந்த ஏர்-இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி விமான நிலையம் வந்தடைந்தது.
சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் தற்போது கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு தீவிரமாகப் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 1,411 பேர் இந்த நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் சனிக்கிழமை மட்டும் 175 பேர் பலியாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


