அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனாவில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வது எப்படி?

கரோனா.. உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒற்றைச் சொல்லாக மாறிப் போன வைரஸின் பெயர். 140 நாடுகளைத் தாக்கி, 5,700க்கும் மேற்பட்டோரின் உயிரை பலிவாங்கியிருக்கும் கரோனா இப்போது ஒட்டுமொத்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2020, 8:39 am


கரோனா.. உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒற்றைச் சொல்லாக மாறிப் போன வைரஸின் பெயர். 140 நாடுகளைத் தாக்கி, 5,700க்கும் மேற்பட்டோரின் உயிரை பலிவாங்கியிருக்கும் கரோனா இப்போது ஒட்டுமொத்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி? அதற்கு மருந்து உண்டா? நாம் வெளியே செல்லக் கூடாதா? வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்பது தான் மக்களின் தற்போதைய மிகப் பெரிய கேள்விகளாக உள்ளன.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நம்மை நாமே எப்படி தற்காத்துக் கொள்வது என்பதுவே..

முதல் விஷயம், நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விடவும், நோய் வராமல் தற்காத்துக் கொள்வதுதான் சிறந்தது.

எனவே, வெளியிடங்களுக்குச் செல்லும் போது, வீட்டிலேயே இருக்கும் போதும், அவ்வப் போது கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். தண்ணீர் ஊற்றி கையை சுத்தமாகக் கழுவ வேண்டும்.

கரோனா பாதித்தவர் இருமும் போது அவரது வாயில் இருந்து வரும் எச்சில் துளிகள் மூலமாக மற்றவருக்கு கரோனா பரவும். இந்த எச்சில் துளி காற்றில் அலைந்து மற்றவர்கள் சுவாசிக்கும் போது அதன் மூலம் கரோனா பரவவும் வாய்ப்பு உள்ளது. மற்றபடி, இருமல் அல்லது தும்மல் மூலம் வெளியே வந்த கரோனா வைரஸ், ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கும் போது, அதனை நாம் தொட்டுவிட்டு, வாய், மூக்கு அல்லது கண்ணில் வைத்துவிட்டால் அதன் மூலமாகவும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, கைகளை கழுவுதல், ஒரு முறைப் பயனப்டுத்தும் டிஷ்யூ பேப்பரைக் கொண்டு தும்மும் போது அல்லது இருமும் போது வாய் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும். 

உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம். கைக் கழுவாமல் கண், மூக்கு, வாயைத் தொட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.