கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள சூழலில் அதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ நெருங்குகிறது. இந்தநிலையில் கேரளத்தில் புதிதான 19 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இத்துடன் அங்கு கரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது.