தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகாராஷ்டிரத்தில் வேகமாகப் பரவும் கரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை நம்பிக்கையூட்டுகிறது

வியாழக்கிழமை நள்ளிரவு வரை மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ல் இருந்து 135 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2020, 7:45 am

மும்பை: வியாழக்கிழமை நள்ளிரவு வரை மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ல் இருந்து 135 ஆக உயர்ந்துள்ளது.

புணே மற்றும் கோல்ஹாபுரில் தலா ஒருவரும், சாங்லியில் மூவரும், நாக்பூரில் நால்வரும், கோண்ட்யாவில் ஒருவரும் அடங்குவர்.

அதே சமயம், மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டதாக மாநில நல்வாழவுத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பலரின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. இதன் மூலம் கரோனாவை குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 4,200 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க மூன்று விஷயங்களைக் கைக்கொண்டுள்ளோம். அதாவது, அடையாளம் காண்பது, சோதனை செய்வது, சிகிச்சை அளிப்பது இதுவே தாரக மந்திரமாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய ரத்தமில்லாமல் மருத்துவத்துறை திணறி வருகிறது. சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில் பொதுமக்கள் தாமாக முன் வந்து ரத்த தானம் அளிக்க முன் வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.