மத்தியப் பிரதேசத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 66 ஆக உயர்வு

மத்தியப் பிரதேசத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தூரில் செவ்வாய்க்கிழமை செய்யப்பட்ட சோதனை முடிவுகள் வந்த நிலையில், மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை இந்தூர்- 44, ஜபல்பூர் -8, போபால் -5, உஜ்ஜைன் -5, மற்றும் சிவ்புரி மற்றும் குவாலியரில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com