
கோப்புப்படம்
மத்தியப் பிரதேசத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
இந்தூரில் செவ்வாய்க்கிழமை செய்யப்பட்ட சோதனை முடிவுகள் வந்த நிலையில், மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இந்தூர்- 44, ஜபல்பூர் -8, போபால் -5, உஜ்ஜைன் -5, மற்றும் சிவ்புரி மற்றும் குவாலியரில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...