போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை, குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.
இந்த குழந்தை பிறந்து 9 நாட்களே ஆன நிலையில் அதற்கு கரோனா சோதனை நடத்தப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பச்சிளம் குழந்தை கரோனாவில் இருந்து மீண்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், எனது மனைவிக்கு ஏப்ரல் 7ம் தேதி சுல்தானியா ஜனனா மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிறகு அவர்கள் வீடு திரும்பிவிட்டனர்.
இதற்கிடையே, பிரசவத்தின் போது பணியில் இருந்த பெண் மருத்துவப் பணியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தாய்க்கும், குழந்தைக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், குழந்தைக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் பூரண குணம் அடைந்து என் குழந்தை வீட்டுக்கு வந்து விட்டது. அதற்கு பிரக்ரிதி (இயற்கை) என்று பெயரிட்டுள்ளோம். பேரிடருக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளது என் குழந்தை என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


