தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தது 1,000 டோஸ் "ரெம்டெசிவிர்' மருந்து

கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள "ரெம்டெசிவிர்' மருந்து 1,000 டோஸ்கள்  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 

News image
Updated On :4 மே 2020, 9:28 pm


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள "ரெம்டெசிவிர்' மருந்து 1,000 டோஸ்கள்  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் இந்த மருந்து தகுந்த பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கு "ரெம்டெசிவிர்' மருந்தினை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் அங்கீகரித்துள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஏஐடி) மேற்கொண்ட பரிசோதனையின்படி, "பிளாசிபோ' மருந்து கொடுக்கப்பட்ட கரோனா நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், "ரெம்டெசிவிர்' மருந்து கொடுக்கப்பட்ட கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ஹெபடைடிஸ் மற்றும் எபோலா நோய்த் தாக்கத்தின்போது பல நோயாளிகளுக்கு "ரெம்டெசிவிர்' மருந்து கொடுத்து பரிசோதித்தபோது, அது உரிய பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மருந்துக்கான மூலக்கூறுகளை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனினும், ரெம்டெசிவிருக்கான காப்புரிமையை அமெரிக்காவைச் சேர்ந்த "கிலியாட் சைன்சஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் இந்திய நிறுவனமே நாட்டில் "ரெம்டெசிவிர்' மருந்தை தயாரிக்க இயலும். 

இதுகுறித்து சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் சேகர் மண்டே கூறுகையில், "ரென்டெசிவிர் மருந்தை இந்திய சந்தைக்கு கொண்டுவருவது தொடர்பாக அதற்கான காப்புரிமையை பெற்றுள்ள கிலியாட் சைன்சஸ் நிறுவனமே முடிவு செய்யும். 

இந்தியாவில் சர்வதேச காப்புரிமையை பெறுவதற்கு "கட்டாய உரிமம்', "விருப்ப உரிமம்' என இரு முறைகள் உள்ளன. எனினும், இதுதொடர்பான முடிவு அந்த நிறுவனம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையை பொருத்தே அமையும்' என்றார். 

கிலியாட் சைன்சஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டேனியல் ஓடே கடந்த வாரம் கூறுகையில், "ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சர்வதேச அளவுக்கு விரிவுபடுத்துவதற்காக மருந்து தயாரிப்பாளர்களின் உலகளாவிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த முயன்று வருகிறோம். 

போதிய அளவு மருந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கு உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.