போபால்: குவைத்தில் இருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 130 பயணிகளில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இந்தியா வந்து சேர்ந்து 4 நாட்களுக்குப் பிறகு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் விமானத்தில் வந்தவர்களும், விமான நிலைய ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அவர்கள் ராணுவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்றவர்கள் ராணுவ மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவர்களில் 70 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் கரோனா சோதனை செய்யப்பட உள்ளது.
மேலும், அவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களையும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.