ஒடிசா, ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று காலை 10 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 
ஒடிசா, ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று காலை 10 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ஒடிசா

ஒடிசாவில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 11 மாவட்டங்களிலிருந்து 102 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 978 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், நேற்று வரை ஒரு லட்சம் மாதிரிகள் சோதனை செய்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் 

ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 122 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு 5,629 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

தற்போது 2,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதித்த 3,219 பேர் குணமடைந்துள்ளனர். 2,864 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com