கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகண்ட்:
உத்தரகண்ட்டில் புதிதாக 15 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப் பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 273 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,606 ஆக உயர்ந்துள்ளது. 3,581 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 165 பேர் பலியாகியுள்ளனர்.