தாராவியில் புதிதாக 36 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,598 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 59,546 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 85 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1,982 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 698 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,616 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:
மும்பையில் இன்று புதிதாக 1,438 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 35,273 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 38 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1,135 ஆக உயர்ந்துள்ளது.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 36 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவி பகுதியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,675 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 61 ஆக உள்ளது.