புது தில்லி: மாநிலங்களவைச் செயலக இயக்குநர் மற்றும் அவரது மனைவி, பிள்ளைக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் வியாழக்கிழமை வரை அலுவலகத்துக்கு வந்து பணியாற்றியுள்ள நிலையில், அவரது அலுவலக அறை தூய்மைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அவரது அலுவலக அறை அமைந்திருக்கும் தளம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகளும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளன.