ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும்,
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எஃப் இணைந்து தீவிரவாதிகளைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குல்கம் மாவட்டத்தின் மன்ஸ்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஏற்கெனவே இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com