கரோனா: கேரளத்தில் 61, கர்நாடகத்தில் 299 பேருக்கு புதிதாக தொற்று

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளம்:

கேரள நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்ததாவது:

கேரளத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 37 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் திரும்பியுள்ளனர். 4 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 670 ஆக உள்ளது.

கர்நாடகம்:

கர்நாடக நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:

மே 30 மாலை 5 முதல் மே 31 மாலை 5 மணி வரை கர்நாடகத்தில் புதிதாக 299 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,221 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com