கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளம்:
கேரள நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்ததாவது:
கேரளத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 37 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் திரும்பியுள்ளனர். 4 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 670 ஆக உள்ளது.
கர்நாடகம்:
கர்நாடக நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:
மே 30 மாலை 5 முதல் மே 31 மாலை 5 மணி வரை கர்நாடகத்தில் புதிதாக 299 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,221 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.