உத்தரகண்ட்: அமைச்சர் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த 22 பேருக்கு கரோனா தொற்று

​உத்தரகண்டில் மாநில அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரகண்ட்: அமைச்சர் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த 22 பேருக்கு கரோனா தொற்று


உத்தரகண்டில் மாநில அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநில தலைமைச் செயலர் உத்பல் குமார் இதுபற்றி தெரிவித்ததாவது:

"உத்தரகண்ட் அரசின் மாநில அமைச்சருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரிடம் பணியாற்றுபவர்கள் என மொத்தம் 22 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

முன்னதாக வெளியான தகவலின்படி: 

உத்தரகண்டில் இன்று புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com