ஆந்திரப் பிரதேசம், அசாம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம்:
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,042 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
அசாம்:
அசாமில் இன்றைக்கு (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. இதில் 163 பேர் குணமடைந்துள்ளனர். 1,102 பேர் சிகிச்சையில் உள்ளனர், 4 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரகண்ட்:
உத்தரகண்டில் இன்று புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 262 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,709 பேர் குணமடைந்துள்ளனர். 2,901 பேர் சிகிச்சையில் உள்ளனர். பலி எண்ணிக்கை 213 ஆக உள்ளது.