திருப்பதியில் உண்டியல் காணிக்கை ரூ. 2.18 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.18 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
உண்டியல் காணிக்கை ரூ. 2.18 கோடி (கோப்புப்படம்)
உண்டியல் காணிக்கை ரூ. 2.18 கோடி (கோப்புப்படம்)

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.18 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.18 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

32,297 பக்தா்கள் தரிசனம்:

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 32,297 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,959 போ் முடி காணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 7 ஆயிரம் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலைப் பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com