இந்தியாவின் கரோனா பாதிப்பு 89 லட்சத்தை தாண்டியது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38,617 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தினசரி தொற்று பாதிப்பின் எண்ணிக்கை லேசான அதிகரிப்பை கண்டுள்ளது.
இந்தியாவின் கரோனா பாதிப்பு 89 லட்சத்தை தாண்டியது

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38,617 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தினசரி தொற்று பாதிப்பின் எண்ணிக்கை லேசான அதிகரிப்பை கண்டுள்ளது என்று மத்திய மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் புதன்கிழமை  காலை வரையிலான 24 மணி நேரத்தில் 38,617 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 89,12,908-ஆக அதிகரித்தது. நாட்டில் தொடர்ந்து பதினொன்றாவது நாளாக 50 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. கடைசியாக நவம்பர் 7 ஆம் தேதி தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது. 

அதே காலகட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 474 போ் உயிரிழந்தனா். நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,993-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.47 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4,46,805-ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் 5.05 சதவீதமாகும். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 8-ஆவது நாளாக 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 83,35,109-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 93.42 சதவீதமாகும். கடந்த 24 ணி நேரத்தில் 44,739 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 82,904 பேரும், கேரளத்தில் 70,191 பேரும், தலைநகர் தில்லியில் 42,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் 76.7 சதவீத வழங்குகள் உள்ளன.

நாடு முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 9,37,279 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 12,74,80,186 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com