மும்பை: மும்பையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள், டிசம்பர் 31 வரை திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதே வேளையில் மகாராஷ்டிர மாநிலத்தின் இதரப் பகுதிகளில் நவம்பர் 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், மாணவ, மாணவிகளின் நலன் கருதி, மும்பையில் மட்டும் டிசம்பர் 31 வரை பள்ளிகளைத் திறக்க அனுமதியில்லை என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. தந்தையை பரிதவிக்கவிட்ட மகன்கள்: ரூ.1 கோடி சொத்துகளை ரத்து செய்த கோட்டாட்சியா்
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்குள் பள்ளிகள், மாநிலம் முழுவதும் மும்பையைத் தவிர்த்துப் பிற பகுதிகளில் வரும் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மட்டும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் கைப்பட எழுதிக் கொடுக்கும் கடிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.