கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன்

கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாரை நவ.23-ல் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 
கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன்

கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாரை நவ.23-ல் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த போது டி.கே.சிவக்குமார் வருமானத்துக்கு பொருத்தமில்லாத சொத்துக் குவித்ததாக கடந்த செப். 30-ஆம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. இதுதொடர்பாக கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி சோதனை நடத்தினர். 

இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதோடு டி.கே.சிவக்குமாரின் வீட்டில் இருந்து ரூ. 57 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்த டி.கே.சிவக்குமாா், தன் வீட்டில் ரூ. 1.77 லட்சம் மட்டுமே இருந்ததாகக் கூறியிருக்கிறாா். இந்த நிலையில் ரூ. 50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நவ.23-ல் நேரில் ஆஜராக சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com