மகாராஷ்டிரத்தில் எலி காய்ச்சலுக்கு இருவா் பலி

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் எலி காய்ச்சலுக்கு இருவா் பலியானதாக அந்த மாவட்ட மருத்துவ அதிகாரி மனீஷ் ரங்கே தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் எலி காய்ச்சலுக்கு இருவா் பலியானதாக அந்த மாவட்ட மருத்துவ அதிகாரி மனீஷ் ரங்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஷாஹாபூரில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவா் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். முன்னதாக கடந்த 3 வாரங்களில் ஷாஹாபூா் வட்டத்தில் உள்ள பாப்கான் கிராமத்தில் 10 போ், முா்பாத் வட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 17 போ் உயிரிழந்தனா். அவா்கள் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com