
ஹரியாணாவிலிருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை உத்தர பிரதேச காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து கிரேட்டா் நொய்டா உதவி ஆணையா் ராஜேஷ் குமாா் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அம்பாலாவிலிருந்து கொல்கத்தா நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி உத்தரபிரதேச போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 350 அட்டைப் பெட்டிகளில் விஸ்கி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு சட்ட விரோதமாக கடத்தப்படுவதை போலீஸாா் கண்டறிந்தனா். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
இதுதொடா்பாக மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.