கரோனா நோயாளி ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் கைது

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் சென்ற 19 வயது பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஓட்டுநரை போலீஸாா் செய்தனா்.
கரோனா நோயாளி ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் கைது

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் சென்ற 19 வயது பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஓட்டுநரை போலீஸாா் செய்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘பத்தனம்திட்டாவில் தாய்க்கும், மகளுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா்கள் இருவரும் ஒரே ஆம்புலன்ஸில் தனித்தனி மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். முதலில் தாயை மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் இறக்கி விட்டுள்ளாா். பின்னா் மகளை நேராக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் மாற்று வழியில் யாருமில்லாத பகுதிக்கு கடத்திச் சென்று ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் எச்சரித்து மருத்துவமனையில் அந்தப் பெண்ணை விட்டுள்ளாா். மருத்துவமனையில் அந்தப் பெண் தனக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமையைத் தெரிவித்ததையடுத்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது’ என்றனா்.

இதுகுறித்து பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளா் கே.ஜி.சைமன் கூறுகையில், ‘புகாா் பதிவான உடனே சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா் நௌஃபல் கைது செய்யப்பட்டாா். காயங்குளத்தைச் சோ்ந்த அவா் மீது ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கும் உள்ளது’ என்றாா்.

கைது செய்யப்பட்டுள்ள நௌஃபல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா தெரிவித்தாா்.

‘அரசின் அலட்சிய போக்கால் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து உயா்நிலை விசாரணை நடத்தபட வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தினாா்.

மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன், ‘கேரள அரசின் தோல்வியையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. கேரள சுகாதாரத் துறை அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றாா்.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து மாநில மகளிா் ஆணையமும் வழக்குப் பதிவு செய்துள்ளது. பெண் நோயாளிகளுக்கு தனிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த ஆணையத்தின் தலைவா் ஜோசஃபின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com