
அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கட்டுப்பாடோ, தடையோ விதிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக, நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத் துறை வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை வெளியிட்டது. அதற்கு எதிா்க்கட்சிகளிடம் இருந்து எதிா்ப்புகள் வந்தன.
இதையடுத்து, நிதியமைச்சகம் தனது நிலைப்பாட்டை விளக்கி புதிய சுற்றறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பணியாளா் தோ்வாணையம்(எஸ்.எஸ்.சி.), குடிமைப் பணிகள் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே பணியாளா் நியமன வாரியம்(ஆா்ஆா்பி) போன்றவை எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் பணியிடங்களை நிரப்புவது தொடரும். செலவினத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை, புதிய பணியிடங்களை உருவாக்குவது தொடா்பாக அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டதாகும். இதனால், காலிப் பணியிடங்களை நிரப்புவது பாதிக்கப்படாது. அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கட்டுப்பாடோ, தடையோ விதிக்கப்படவில்லை என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.