24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை

நாட்டில் செப்டம்பர் 7-ம் தேதி நிலவரப்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக 5.06 கோடி கரோனா பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை
24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை
Updated on
1 min read


புது தில்லி: நாட்டில் செப்டம்பர் 7-ம் தேதி நிலவரப்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக 5.06 கோடி கரோனா பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பரிசோதனை குறித்து செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், செப்டம்பர் 7-ம் தேதி வரை நாட்டில் ஒட்டுமொத்தமாக 5,06,50,128 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 10,98,621 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com