

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 485 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட மொத்த காவலர்களின் எண்ணிக்கை 18,890 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,729 காவலர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14,975 காவலர்கள் குணமடைந்துள்ளனர், 186 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
மேலும் இதுவரை கரோனா தொடர்பாக காவல் துறை ரூ. 24,81,95,414 அபராதமாக வசூலித்துள்ளது. 34,690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.