தில்லியில் புதிதாக 4,235 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 4,235 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,18,304 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 29 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,744 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 3,403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,84,748 பேர் குணமடைந்துள்ளனர். 28,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று 56,656 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 21,39,432 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.