கர்நாடக புதிய தொழிற்கொள்கை: ரூ.30,000 கோடி செல்போன் உற்பத்தி இலக்கு

கர்நாடகத்தில் புதிய தொழிற்கொள்கையால் ரூ.30,000 கோடி மதிப்பிற்கு செல்போன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடகத்தில் புதிய தொழிற்கொள்கையால் ரூ.30,000 கோடி மதிப்பிற்கு செல்போன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் செல்போன் உற்பத்திக்காக புதிய தொழிற்கொள்கை 2020 - 25 என்ற திட்டத்தை கர்நாடக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்டது.

ஆப்பிள், வின்ஸ்ட்ரான், லாவா உள்ளிட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்தியா செல்போன் மற்றும் மின்னணுப் பொருள்கள் சங்கம் (ஐ.சி.இ.ஏ), ஐந்து ஆண்டுகளுக்கான பாலிசி காலத்தில் வருடாந்திர வருவாயில் 1 சதவீத உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை போன்ற குறிப்பிட்ட கொள்கை போன்ற அரசாங்கத்தின் சலுகைகள் வரவேற்கத்தக்கது. 

இதன்மூலம் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித்துறை வளர்ச்சி அடையும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 1 முதல் 1.5 சதவிகிதம் வரையுள்ள செல்போன் உற்பத்தி இந்த திட்டத்தின்மூலம் 7 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக செல்போன் மற்றும் மின்னணுப் பொருள்கள் சங்க தலைவர் பங்கச் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 2023-ஆம் ஆண்டுக்குள் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com