
ஒடிசாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,356 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி
ஒடிசாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,356 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,356 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,05,452-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 39,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 1,65,432 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16 பேர் உயிரிழந்ததால், கரோனா தொற்றுக்கு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 783-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...