கல்குவாரி குடோனில் வெடி பொருள்களை கையாளும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சாக்கேனஹள்ளி கிராமத்தில் உள்ள கல் குவாரி குடோனில் ஞாயிற்றுக்கிழமை வெடி பொருள்களை கையாளும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பத் (27) என்பவா் உயிரிழந்தாா். காயமடைந்த 2 பேரில் ஒருவா் ஹாசனிலும், மற்றொருவா் பெங்களூரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து சாந்திகிராம போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.