பஞ்சாபின் லூதியானா நகரத்தில் இரண்டு அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும், 36 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கட்டடம் தபா சாலையில் உள்ள முகந்த் நகரில் அமைந்துள்ளது. விபத்தில்
சிக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டடத்தின் பெரும்பகுதி இடிந்து விழுந்ததால், அருகிலுள்ள கட்டடங்களுக்கும் ஓரளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.