மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியதைத் தொடர்ந்து, முதல்வர் உத்தவ் தாக்கேரவிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்தார் அனில் தேஷ்முக்.
அனில் தேஷ்முக் மீது பரம்வீர் சிங் எழுப்பிய ஊழல் குற்றச்சாடு குறித்து 15 நாள்களில் விசாரணையைத் தொடங்க வேண்டும் என சிபிஐ-க்கு மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளார்.
மாதந்தோறும் ரூ. 100 கோடி லஞ்சம் வசூலித்துத் தர வேண்டும் என அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தியதாக பரம்வீர் குற்றஞ்சாட்டியிரு்ந்தார்.