காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சருமான மகேஷ் ஜோஷி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
82 வயதாகும் ஜோஷி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
அவர் 1967-ல் முதன்முதலாக இந்தூர்-1 தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் இந்தூர்-3 சட்டசபை பிரிவிலிருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோஷி 1985-இல் மாநில அமைச்சரானார்.
இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான இந்தூரில் நடைபெறுகிறது. அவரின் உயிரிழப்புக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரித்துள்ளார். மேலும் ஜோஷியின் மரணம் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று சுட்டுரை பதிவில் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


