உத்தரப் பிரதேச அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில அமைச்சர் சுக்லா கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் வியாழக்கிழமை பரிசோதனை செய்தார். சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்புகொண்டவர்கள் நிச்சயம் தங்களைப் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.