பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவரது மருமகனும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்(80) பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னா் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில் சரத் பவாரின் உடல்நிலை குறித்து கூறிய மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் ஒரு தினங்களில் சரத் பவார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினார்.