

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 895 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 66,358 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,10,085ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 6,72,434 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவிலிருந்து இன்று 67,752 பேர் மீண்டனர். இதுவரை 36,69,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு ஒரேநாளில் 895 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 66,179ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.