வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் ஐசியு படுக்கைகள் நிரம்பின: கேஜரிவால்

தில்லியில் கிட்டத்தட்ட அனைத்து ஐசியு படுக்கைகளும் நிரம்பியதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :27 ஏப்ரல் 2021, 9:11 am

DIN

தில்லியில் கிட்டத்தட்ட அனைத்து ஐசியு படுக்கைகளும் நிரம்பியதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கரோனா மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் கேஜரிவால் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கேஜரிவால் பேசியதாவது, தில்லியில் அனைத்து ஐசியு படுக்கைகளும் நிரம்பியுள்ளன. ராம்லீலா மைதானம் மற்றும் ஜிடிபி மருத்துவமனையிலுள்ள ஐசியு படுக்கைகளும், ராதா சோமி வளாகத்திலுள்ள 200 ஐசியு படுக்கைகளும் நிரம்பியுள்ளன. எனினும் வரும் 10-ம் தேதிக்குள் 1,200 கரோனா படுக்கைகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

மேலும், கடந்த 4 முதல் 5 நாள்களாக நாட்டின் பெரும்பாலான நிறுவனத்திடம் உதவிகோரி கடிதம் எழுதியுள்ளேன். மிகப்பெரிய உதவிகளைத் தற்போது பெற்று வருகிறோம். அதிக அளவிலான மக்களிடமிருந்து உதவிகள் வருகின்றன. தில்லி அரசுக்கு உதவும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.