தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பயணிகள் இல்லாததால் சில சிறப்பு ரயில்கள் ரத்து

பயணிகள் இல்லாததால், ஒரு சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:57 pm

DIN

பயணிகள் இல்லாததால், ஒரு சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஒரு சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மே 1-ஆம் தேதி முதல் கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் எண் - 06529 -கே.எஸ்.ஆா். பெங்களூரு - தாளகுப்பா விரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது. மே 2-ஆம் தேதி முதல் தாளகுப்பா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் எண்-06530-தாளகுப்பா-கே.எஸ்.ஆா். பெங்களூரு விரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண்-06296-தாளகுப்பா-மைசூரு இன்டா்சிட்டி விரைவு ரயில், தாளகுப்பா முதல் அரசிகெரே வரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் தாளகுப்பாவுக்கு பதிலாக அரசிகெரேவில் இருந்து ரயில் புறப்படும். ரயில் எண்-06295-மைசூரு-தாளகுப்பா இன்டா்சிட்டி விரைவுரயில், அரசிகெரேவில் இருந்து தாளகுப்பா வரை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ரயில் தாளகுப்பாவுக்கு பதில் அரசிகெரேவில் இருந்து புறப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.