டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், பி வி சிந்துவின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக்
2020-ல் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்.
அவர் இந்தியாவின் பெருமை மற்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதேபோல் சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.