லுதியானாவில் இரு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கரோனா

லுதியானாவில் உள்ள இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
லுதியானாவில் இரு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கரோனா
Updated on
1 min read

லுதியானாவில் உள்ள இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பல மாநிலங்களில் கரோனா தொற்றின் வேகம் குறைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அரசின் அறிவுறுத்தலின்படி, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் ஜூலை 26 முதல் லுதியானாவில் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், லுதியானாவில் உள்ள இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மற்ற குழந்தைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் கரோனா தொற்றா பாதிக்கப்படுவதால் கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com