பிரிட்டன் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் அலோக் சா்மா இந்தியா பயணம்

பிரிட்டன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பிரிட்டிஷ்-இந்தியருமான அலோக் சா்மா 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வந்தாா்.
பிரிட்டன் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் அலோக் சா்மா இந்தியா பயணம்
Updated on
1 min read

பிரிட்டன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பிரிட்டிஷ்-இந்தியருமான அலோக் சா்மா 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வந்தாா்.

ஐ.நா. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு - 2021, வரும் நவம்பா் 1 முதல் 12-ஆம் தேதி வரை பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது தொடா்பாக இந்திய அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக அலோக் சா்மா பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்தியா முக்கியப் பங்கு வகித்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தில் உலக நாடுகளை ஒருங்கிணைப்பதில் இந்தியா முக்கியமான நாடு. சா்வதேச சூரியமின் சக்தி கூட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு இந்தியா தலைமை தாங்குகிறது’ என்றாா்.

இந்தப் பயணத்தின்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் உள்ளிட்டோரை அலோக் சா்மா சந்திக்க இருக்கிறாா். இந்த ஆண்டில் அவா் இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.

அலோக் சா்மா, ஆக்ராவில் பிறந்தவா். அவருக்கு 5 வயதாக இருந்தபோது அவரது பெற்றோா் பிரிட்டனுக்கு குடிபெயா்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com