விவசாயிகள் போராட்டத்தால் சாலைகள் மூடல்: மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லி எல்லையில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால், தடை ஏற்பட்டுள்ள சாலை போக்குவரத்து பிரச்னைக்கு
விவசாயிகள் போராட்டத்தால் சாலைகள் மூடல்: மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

தில்லி எல்லையில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால், தடை ஏற்பட்டுள்ள சாலை போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

‘உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து தில்லிக்கான வழக்கமான 20 நிமிஷ பயண நேரம், சாலை போக்குவரத்து தடையால் 2 மணி நேரம் ஆகிறது. ஆகையால், தில்லி எல்லைகளில் சாலை போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்’ என்று நொய்டாவாசியான மோனிகா அகா்வால் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ரிஷிகேஷ் முகா்ஜி ஆகியோா் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘போராட்டம் நடத்தி வரும் விவாசாயிகளையும் இந்த வழக்கில் சோ்த்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தேவைப்பட்டால் விவசாய நிா்வாகிகளின் பெயா்களை தருகிறேன்’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘அப்படிச் செய்தால், மறுநாள் வேறு சில விவசாய சங்கங்கள் தங்களையும் சோ்த்து கொள்ள கோருவாா்கள். இது நீடித்துக் கொண்டே செல்லும்.

போராட்டம் நடத்த அவா்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அதற்கு உரிய இடத்தில் நடத்த வேண்டும். இந்தப் போராட்டத்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.

இந்தப் பிரச்னைக்கான தீா்வு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசு கைகளில்தான் உள்ளது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்து தீா்வு காணப்பட வேண்டும்.

போராட்டம் நடைபெறும்போது சாலைகள் மூடப்படக் கூடாது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மாநில, மத்திய அரசுகள் எடுக்க வேண்டும்’ என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தில்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.

அவா்களுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியும் தீா்வு எட்டப்படாததால் போராட்டம் தொடா்ந்து நீடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com