உரிய நேரத்தில் அரசு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால், இப்போதுள்ளதை விட முன்னதாகவே அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க முடியும் என்பது உண்மைதானா? என்ற கேள்விக்கு, ‘உள்ளூா் தடுப்பூசி உற்பத்தியாளா்களிடம் கொள்முதல் ஒப்பந்தம் அளிப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் தயாரிப்புக்கு முன்னதாகவே கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. தடுப்பூசி கிடைப்பதற்கு ஏற்ப உடனுக்குடன் மக்களுக்கு செலுத்தப்பட்டது. மிகவும் குறுகிய காலத்திலேயே 100 கோடி தடுப்பூசிகளை நமது நாட்டில் செலுத்தியுள்ளோம். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தடுப்பூசி திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டது. நவம்பா் 27-ஆம் தேதி வரை தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.19,675.46 கோடி செலவிட்டுள்ளது’ என்று அமைச்சா் பாரதி பிரவீண் குமாா் பதிலளித்தாா்.