மியான்மரில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஆங் சான் சூகிக்கு எதிராக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தீா்ப்புகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. அண்டை நாடு என்ற முறையில், மியான்மா் ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதை இந்தியா பெரிதும் விரும்புகிறது.
மியான்மரில் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றைக் குலைக்கும் எந்த நடவடிக்கையும் மிகவும் கவலைக்குரியது ஆகும் என்றாா் அவா்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அதைத் தொடா்ந்து, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு நவம்பரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது, சூகி ராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னா் அவரது கட்சி சாா்பில் முகநூல் பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டது ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் ஆங் சான் சூகி மீது ராணுவ ஆட்சியாளா்கள் வழக்கு தொடா்ந்தனா்.
தலைநகா் நேபிடாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு வழக்குகளில், ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
இதுதவிர ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடா்பாகவும் சூகி மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் அவா் குற்றவாளி எனத் தீா்ப்பு கூறப்பட்டால் 100 ஆண்டுகளுக்கு மேல் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! கே.சி. வேணுகோபால்

நடுகடலில் தீப்பிடித்த படகு! பாதுகாப்பாக தப்பித்த மீனவர்கள்! | Thoothukudi

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


